சலேவின் மனு மீதான இடைக்கால மனுக்கள் பரிசீலனை!

Suresh-Sallay-2026.04.22-1

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தம்மை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது இடைக்கால மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது விடயங்களை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை இந்த மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்