பாராளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எஞ்சியுள்ள எதிர்க்கட்சிக் குழுவினர், தங்களது சமூக ஊடகப் பிரச்சார இயந்திரத்திற்காக ஏதேனும் ஒரு கூற்றை வெளியிட்டுவிட்டு, சபையில் கூடத் தங்காமல் தப்பியோடுவதை வழமையாக்கிக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தாம் பின் கதவால் தப்பியோடப் போவதில்லை என உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவரது உரையைத் தொடர்ந்து ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக உரையாற்ற ஆயத்தமானபோதே நாமல் ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.
வைத்தியர் நஜித் இந்திக, நாமல் ராஜபக்ஷவின் பெயரை குறிப்பிட்டு சபையில் இருக்குமாறு சவால் விடுத்தபோதிலும், அவர் தப்பியோடியமை வார இறுதி அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முழு குடும்பமும் அலரிமாளிகையிலிருந்து தப்பியோடி திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தமை, பசில் ராஜபக்ஷ இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குத் தப்பியோடியமை மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை விட்டுத் தப்பியோடியமை தொடர்பான கடந்தகால நினைவுகளும் சமூக ஊடகங்களில் மீண்டும் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன.











