22 இலட்சம் பேர் தொடர்பான புதிய தகவல்

image_2026-08-13_092536826

அரசாங்கத்தினால் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நீதித்துறை மறுசீரமைப்புகள் தொடர்பில் சமூகத்தின் கவனம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த மறுசீரமைப்புகள் அத்தியாவசியமானவை என சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற சுமார் 80 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர்கள், 2023ஆம் ஆண்டு நிறைவடையும் போது நீதித்துறை அமைப்பில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கியிருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம், வழக்குத் தொடர்ந்த தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு என இரு தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கினரான சுமார் 22 இலட்சம் பேர் தொடர்பான வழக்குகள் நீதித்துறை அமைப்பில் தேங்கியுள்ள நிலை காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்