ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரை இலக்கு வைத்து, “வீதியில் வைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்” என அவர் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த கூற்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இன்று (10) வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3










