ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (இலங்கை வானொலி) தனது பாடல்களை ஒளிபரப்ப விதித்திருந்த தடைக்கு எதிராக பிரேமகீர்த்தி டி அல்விஸ் போராட்டம் நடத்தியதாக விஷாரத் நந்தா மாலினி வானொலி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நெத் எஃப்.எம் (Neth FM) அலைவரிசைக்காக களூம் ஸ்ரீமால் நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். “எனது பாடல்கள் வானொலியில் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் பிரேமகீர்த்தி அதற்கு எதிராக வியக்கத்தக்க போராட்டத்தை நடத்தினார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித இசைக்கருவிகளும் இன்றி அற்புதமாகப் பாடி காண்பிக்கும் குரல் அடங்கிய அந்த உரையாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.






















