ரேணுக பெரேரா விளக்கமறியலில்!

Renuka Perera 2021.09.17 (2)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை (பஸ் பெர்மிட்களை) வழங்கியதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக லஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இன்று காலை லஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்