ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவசாயிகளின் பேரணி, அதன் தலைவரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொலன்னறுவை மாவட்டத் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதியமைச்சருமான டி.பி. சரத், அனுராதபுர மாவட்டத் தலைவரும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான வசந்த சமரசிங்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு சுபிட்சம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த விவசாயிகளின் பேரணி இன்று பிற்பகல் 4.00 மணிக்கு பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் ஆரம்பமானது.















