Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

எயார்பஸ் வழக்கில் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் சேர்க்கப்பட்டது!

15/09/2026 Leave a Comment

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோட்டை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவைச் சந்தேகநபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் செய்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த கருத்தில்கொள்ளல்களுக்கு அமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் புதிதாக அமைக்கப்படும் – ஜனாதிபதி

15/09/2026 Leave a Comment

புதிய கல்வி சீர்திருத்தங்கள் 06ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனடிப்படையில் 2034ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 புதிய தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் கைத்தொழில், சுற்றுலா மற்றும் தொழினுட்பத் துறைகளுக்குத் தேவையான திறமைமிக்க புதிய மனிதவளம் உருவாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் கடந்த 12ஆம் திகதி பொலன்னறுவையில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க:

மக்களின் அரசாங்கம்: “இலங்கை வரலாற்றில் முதன்முறையாக குடும்ப ஆதிக்கமோ, அதிகளவிலான பணபலமோ, ஊடக பலமோ இன்றி நாட்டின் சாதாரண பொதுமக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கமே இதுவாகும். நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை ஆசனங்களை வழங்கி மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம்.”

பொருளாதார ஸ்திரத்தன்மை: “நாங்கள் ஆட்சியேற்றபோது முடங்கிக்கிடந்த பொருளாதாரத்தையே பொறுப்பேற்றோம். நிலவிய வீழ்ச்சியிலிருந்து மீண்டு, இன்று பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம். மத்திய கிழக்கு யுத்தம், டித்வா (Ditwa) சூறாவளி போன்ற பாரிய சவால்கள் ஏற்பட்டபோதிலும் மக்கள் மீது சுமை ஏற்றப்படாமல் நிர்வகிக்கப்பட்டுள்ளது.”

விவசாயத் துறைக்கான சலுகைகள்: “விவசாயிகளுக்கான உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. இம்முறை நெல் பயிரிடுபவர்களுக்கு மட்டுமன்றி மேலதிக பயிர்ச் செய்கைகளுக்கும் உர மானியம் விரிவாக்கப்படும். அத்துடன், நீர்ப்பாசன மற்றும் குளங்கள் புனரமைப்பிற்காக வரலாற்றில் இல்லாத அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

அரசு சேவை நியமனங்கள்: “கடந்த பல ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த அரசு சேவைக்கான நியமனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவைக்கு 23,000 பேரும், பொலிஸ் சேவைக்கு 10,000 பேரும் அடங்கலாக மொத்தம் 1,21,000 பேரை அரசு சேவையில் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனங்கள் அனைத்தும் அரசியல் கடிதங்களின்றி பரீட்சைகள் மூலம் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறும்.”

கல்வி மறுசீரமைப்பு: “50 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தோ்ச்சியடையாத சிறிய பாடசாலைகளுக்குப் பதிலாக, குறைந்தபட்சம் 500 மாணவர்களுடனான விளையாட்டு மற்றும் கலை வசதிகள் கொண்ட பெரிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும். 6ஆம் தரத்திலிருந்து புதிய கல்வி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.”

சட்டமும் ஒழுங்கும்: “பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 70க்கும் மேற்பட்ட பாதாள உலகத் தலைவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற்று வருவதுடன், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.”

Filed Under: செய்திகள்

நாமலை விளக்கமறியலில் வைத்தமை குறித்து உலகம் கூறுவது என்ன?

15/09/2026 Leave a Comment

நிதிச் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகச் சிதைவடைந்த குழுக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன. இருப்பினும், அவர் மீது நிதிச் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பிலேயே சர்வதேச ஊடகங்களின் விசேட கவனம் திரும்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள நிதிச் குற்றச் சாட்டுகள் தொடர்பாகச் சர்வதேச ஊடகங்களில் வெளியான சில முக்கிய செய்திகள் வருமாறு:

Filed Under: செய்திகள்

ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களின் விருப்பமல்ல, பொதுமக்களின் தேவையாகும் – டில்வின் சில்வா

14/09/2026 Leave a Comment

“நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், நீதிபதிகளின் வீடுகளுக்குச் சென்று கற்களை எறிந்து அச்சுறுத்திய வரலாறே இங்குள்ளது. ரணில் விக்ரமசிங்கவும் அதற்குரிய ஒருவராவார். அவர்களே தற்போது எங்களுக்கு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்து கற்பிக்க வருகிறார்கள். ஜனநாயகம் மறுக்கப்பட்டமையால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட அரசியல் இயக்கம் நாங்கள்தான். அதனால் ஜனநாயகத்தின் பெறுமதியும் ஜனநாயகம் என்றால் என்ன என்பதும் எமக்கு நன்றாகவே தெரியும். ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களின் விருப்பமல்ல, பொதுமக்களின் தேவையாகும். பொய் சுதந்திரமோ அல்லது ஆட்சியாளர்களுக்கான சலுகைகளோ எமது ஜனநாயகமல்ல, மாறாக மக்களுக்குச் சலுகைகள், மக்களுக்கு நீதி மற்றும் உண்மையை தெளிவுபடுத்துவதே எமது ஜனநாயகமாகும்,” என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய டில்வின் சில்வா:

மக்கள் ஆணையைக் காத்தல்: “முன்பு நாம் எமது அரசாங்கத்தை உருவாக்குவது பற்றி பேச ஒன்றுடினோம். ஆனால் இன்று எமது அரசாங்கத்தைப் பற்றி பேச ஒன்றுகூடியுள்ளோம். இது NPPயின் அரசாங்கம் மட்டுமல்ல, இந்நாட்டு மக்கள் அனைவரினதும் அரசாங்கமாகும். அரசாங்கத்தின் மக்கள் ஆணை காலாவதியாகிவிட்டதாகக் கூறும் சிதைவடைந்த எதிர்க்கட்சியினருக்கு, இங்கு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களே உண்மையான பதிலாவர்.”

தேசிய ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கம்: “கடந்த காலங்களில் வடக்கிலோ கிழக்கிலோ மக்கள் ஆட்சியமைக்க வாக்களிக்கவில்லை. மாறாக எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்தே அரசாங்கத்துடன் இணைத்துக் கொண்டனர். ஆனால் இம்முறை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட நாடு முழுவதும் மக்கள் மாளிகாவிற்கு (NPP) வாக்களித்து தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.”

சட்டத்தின் ஆட்சியும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமும்: “நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்து, மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளோம். சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் நிரூபித்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதியோ, முன்னாள் அமைச்சரோ யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே செயற்படுத்தப்படுகிறது.”

அரசியல் பழிவாங்கல் இல்லாத புதிய கலாச்சாரம்: “எதிர்க்கட்சியினர் எம்மீது அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். ஆனால் எவரேனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டாலோ தண்டனை பெற்றாலோ அதைத் தீர்மானிப்பது நீதிமன்றமே தவிர நாமல்ல. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை வீதியில் வைத்துப் படுகொலை செய்தும், பிரகீத் எக்னெலிகொடவைக் காணாமல் ஆக்கியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீவைத்தும் வீதியிலேயே தீர்ப்பு வழங்கிய வரலாற்றைக் கொண்டவர்களே இன்று எமக்கு ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றனர்.”

பொருளாதார மேலாண்மையும் சர்வதேச உறவுகளும்: “இயற்கை அசம்பாவிதங்கள் மற்றும் சர்வதேச மோதல்களுக்கு மத்தியிலும், மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசாங்கம் பொருளாதாரத்தை முறையாக மேலாண்மை செய்து வருகிறது. அத்துடன், சர்வதேச நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர உறவுகளைப் பேணி, தெற்காசியாவிலேயே அனைத்து நாடுகளினாலும் நேசிக்கப்படும் நாடாக இலங்கையை மாற்ற முடிந்துள்ளது.”

“கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் அடைந்த வெற்றிகளைப் பாதுகாத்து, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் இலக்கை எட்டும் வரை மக்கள் சக்தியுடன் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

default
default
default
default
default

Filed Under: செய்திகள்

உலகளவில் இலங்கைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடங்கள்!

14/09/2026 Leave a Comment

நேற்று (13) இரவு நடைபெற்ற ‘World Athletics Ultimate Championship 2026’ ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கத்தை வென்றதுடன், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தைப் (அனுசூரதாவ) பெற்று சாதனை படைத்துள்ளது.

ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க 91.06 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்ததுடன், ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளரை இரண்டாம் இடத்திற்குத் தள்ளினார்.

அதேவேளை, ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, திறம்பட விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்று ஆசியக் கிண்ண அணுசூரதாவைப் பெற்றுக்கொண்டது.

Filed Under: ஆடுகளம், செய்திகள்

தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதும் முறையை மாற்றுவதும் இருவேறு விடயங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி

14/09/2026 Leave a Comment

இரண்டு ஆண்டுகள் என்பது “வளமான நாடு – அழகான வாழ்க்கை”யைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு புதிய தொடக்கமே தவிர, தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதும் ஆட்சி முறையை மாற்றுவதும் இருவேறு விடயங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி:

முறையான மாற்றத்திற்கான சவால்: “ஒரு நாளில் அரசாங்கத்தை மாற்றிவிட முடியும். ஆனால், முறையை (System) மாற்றுவது மிகவும் சிக்கலானதும் பாரிய பொறுப்புடையதுமான பணியாகும். அதற்காக சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்; அரச சேவை மாற்றப்பட வேண்டும்; பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் உருவாக்கப்பட வேண்டும்.”

வலுவான நிறுவனங்களின் தேவை: “எமக்குத் தேவை அதிகாரமிக்க தலைவர்கள் அல்ல, மாறாக அதிகாரமிக்க நிறுவனங்களாகும் (Strong Institutions). அரசாங்கங்கள் மாறினாலும் ஆட்சி முறை சரியாக இயங்க வேண்டுமாயின், நாட்டின் சட்டக் கட்டமைப்பும் நிறுவனங்களும் பலப்படுத்தப்பட வேண்டும். பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற நிலைமை தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.”

சட்டத்தின் ஆட்சியும் குற்றத்தடுப்பும்: “மக்கள் வழங்கிய ஆணையினூடாக ஊழல் மற்றும் குற்றங்களற்ற சமூகம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. சட்டத்தை நிலைநாட்டும்போது அரசியல் பழிவாங்கல்கள் எனக் கூச்சலிடுபவர்களின் குரல்களே இப்போது பல இடங்களில் கேட்கின்றன.”

பெண்களின் அரசியல் பங்களிப்பு: “பெண்கள் சமூகத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல; ஒரு தாய் என்பவள் சமூகத்தையும் எதிர்கால சந்ததியையும் உருவாக்குபவள். பெண்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் மூலம், இன்று பெண்கள் நிமிர்ந்து நின்று அரசியலில் குரல் கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.”

“கடந்த இரண்டு ஆண்டுகள் என்பது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு புதிய ஆரம்பம் மட்டுமே. எக்காரணம் கொண்டும் பின்னோக்கிச் செல்லாத வகையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து முன்நோக்கிச் செல்வோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

default
default
default
default
default

Filed Under: செய்திகள்

கோத்தாவை காட்டிக்கொடுத்தது குடும்பத்தின் உள்வீட்டுச் சதி!

14/09/2026 Leave a Comment

ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்காகவே கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான பலமான சான்றுகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எதிராக ஷிரந்தி மற்றும் மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை அக்காலகட்டத்தில் தெரியவந்திருந்தது. இருப்பினும், ‘வியத்மக’ அமைப்பை உருவாக்கி அரசியல் களத்தைத் தயார்படுத்தி முன்னேறிய கோத்தாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தனது வேட்பாளர் தனமையை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று அதிகாரத்தை உறுதிப்படுத்திய கோத்தாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்ஷவின் அரசியல் ‘மூத்த அண்ணன்மார்கள்’ என அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உள்வீட்டு மோதல் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்காரணமாக, 2022 மார்ச் 03ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இவ்விருவரும், இனி ஒருபோதும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

எனினும், தற்போது கோத்தாபய ராஜபக்ஷவை முற்றாகக் கைவிட்டுவிட்டு, இவர்கள் இருவரும் உள்ளிட்ட குழுவினர் நாமல் ராஜபக்ஷவுடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

அன்பு, அமைதி, ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்போம் – லால் காந்த

14/09/2026 Leave a Comment

“இலங்கையின் அரசியல் இயக்கங்களில் மிக அதிகமாக அடக்குமுறைக்கும் பீடிப்புக்கும் உள்ளான இயக்கம் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகும். இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் வெவ்வேறு அளவுகளில் எங்களை அடக்கியாண்டுள்ளன. 88 – 89 காலப்பகுதியில் 60,000 பேரும், 71 இல் 10,000 பேரும் கொல்லப்பட்டனர்; சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதனால் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது பழிவாங்குவோம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரி சக்திகள் கூட இந்த அணுகுமுறையைப் பாராட்டியுள்ளன,” என விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் கடந்த 06ஆம் திகதி புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த:

அரசியல் கலாச்சார மாற்றம்: “அனுர சகோதரரை இந்நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக்கிய மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 159 நாடாளுமன்ற ஆசனங்களை வழங்கி மக்கள் அரசாங்கத்தை உருவாக்கினர். 76 ஆண்டுகால பழமையான அரசியல் முறையை மாற்றியமைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை அரசாங்கத் தரப்பிலிருந்து முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.”

பழிவாங்கல் இல்லாத ஆட்சி: “இதற்கு முன் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; வீடுகள் கொளுத்தப்பட்டன; வேலைகள் பறிக்கப்பட்டன. நாங்கள் அந்த நிலையை முற்றாக மாற்றினோம். எங்களது தொழிற்சங்கங்கள் கூட எவரையும் அச்சுறுத்தவோ, பலவந்தமாக உறுப்பினர்களாக்கவோ இல்லை.”

அரசு அலுவலகங்களின் நிலை: “பொதுமக்கள் இன்னமும் அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறப்படும் புகார்களுக்கு, ‘எங்களுக்குக் கிடைத்திருப்பது கட்டியெழுப்பப்பட்ட நாடல்ல, அழிக்கப்பட்ட நாடு’ என்பதே பதிலாகும். அதை நாங்கள் தற்போது கட்டியெழுப்பி வருகிறோம்.”

எதிர்காலப் பயணம்: “கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் காட்டிய முன்மாதிரிகளையும் அர்ப்பணிப்புகளையும் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாலும் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றாக எழுச்சி பெறுவோம். சவால்களை எதிர்கொண்டு இறுதி வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.”

Filed Under: செய்திகள்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு!

13/09/2026 Leave a Comment

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்புச் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 70 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டிருந்தன.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்மானித்திருந்தது.

Filed Under: செய்திகள்

BRICS உச்சிமாநாடு உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமையையும் நட்புறவையும் உறுதிப்படுத்துகிறது!

13/09/2026 Leave a Comment

இந்தியாவின் புதுடில்லியில் நிறைவடைந்த BRICS உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பிலான 45 பக்க கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடில்லியில் இடம்பெற்ற இருநாள் உச்சிமாநாட்டைத் தமது ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை பலமாக வலியுறுத்தி நிறைவுசெய்தனர். குறிப்பாக மத்திய கிழக்கு போர், காசா போர், பயங்கரவாதம், சுற்றுச்சூழல், பொருளாதார பாதுகாப்புவாதம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக BRICS உறுப்பு நாடுகளிடையே பொதுவான உடன்பாட்டை எட்டுவது குறித்து விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2026 BRICS உச்சிமாநாடு “மீண்டெழும் திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலையான தன்மை: எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தீம் (Theme) அடிப்படையில் நடத்தப்பட்டது.

“உச்சிமாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதுடில்லி பிரகடனம், நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைக்கும் எதிர்கால ஒத்துழைப்புக்கும் தெளிவான வழிகாட்டலை வழங்கும் என நம்புகிறோம்” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தை நிறைவுசெய்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.

“கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற நமது விவாதங்கள், BRICS என்பது வெறும் நாடுகளின் குழு மட்டுமல்ல, நெருக்கடிகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு (Ecosystem) என்ற நமது நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது” என்றும் மாநாட்டை நடத்தியவர் என்ற ரீதியில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் G7 போன்ற மேற்கத்திய வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட பிரதான வளர்ந்து வரும் பொருளாதாரங்களை (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் பின்னர் தென்னாப்பிரிக்கா) ஒரே அணியில் திரட்டுவதற்காக BRICS மன்றம் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து BRICS குழு விரிவடைந்ததுடன், குறிப்பாக ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதன் உறுப்பினர்களாகச் சேர்ந்துகொண்டன.

“BRICS இன் பலம் நமது பன்முகத்தன்மை மற்றும் நமது ஒத்துழைப்பில் உள்ளது” என்று கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகச் செல்வத்தில் 40% ஐ உற்பத்தி செய்யும் தனது பங்காளிகளுக்கு “உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியை” (Inclusive global growth) ஊக்குவிக்குமாறு மேலும் அழைப்பு விடுத்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இந்திய விஜயத்தை நிறைவுசெய்து உரையாற்றுகையில், BRICS அமைப்பு சர்வதேச அரங்கில் “முக்கிய சக்திகளில் ஒன்றாக” மாறியுள்ளதாகவும், “புதிய, நியாயமான மற்றும் பலதுருவ உலக ஒழுங்கை” உருவாக்கப் பங்காற்றியுள்ளதாகவும் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். மேலும், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மேற்கத்திய தடைகளையும் அவர் கண்டித்தார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மாநாட்டில் உரையாற்றுகையில்:

“வளர்ந்து வரும் உலகளாவிய தெற்கு (Global South) சர்வதேச சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளைப் பாதுகாக்க வேண்டும். விதிகள் இல்லாத உலகம் போக்குவரத்து விளக்குகள் இல்லாத சந்தியைப் போன்றது. அத்தகைய சூழ்நிலையில் குழப்பமும் சீர்குலைவும் தவிர்க்க முடியாதவை. மேலும், பொருளாதார பாதுகாப்புவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அனைத்து வகையான பாதுகாப்புவாதத்தையும் நிராகரிக்குமாறும், பலதரப்பு வர்த்தக முறைமைக்கு ஆதரவளிக்குமாறும் உச்சிமாநாட்டின் உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவழிகாட்டல் கொள்கையைக் விமர்சித்துப் பேசினார்.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மாநாட்டில் உரையாற்றுகையில், உலகிற்கு மற்றொரு பொலிஸ் தேவை இல்லை என்பதை வலியுறுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தார்.

தங்களது கூட்டுப் பிரகடனத்தில், BRICS தலைவர்கள் செப்டம்பர் 12 சனிக்கிழமையன்று “உலக வர்த்தக அமைப்பை (WTO) மையமாகக் கொண்டு, நாடுகளுக்கு பாகுபாடற்ற, திறந்த, நியாயமான, வெளிப்படையான, சரியான, கணிக்கக்கூடிய மற்றும் விதிகள் சார்ந்த பலதரப்பு உலக வர்த்தக முறைமைக்கான BRICS இன் ஆதரவை” மீண்டும் உறுதிப்படுத்தினர்.

2025 ஜனவரியில் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியது முதல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அனைத்து முனைகளிலும் தொடக்கப்பட்ட சுங்கவரிப் போருக்கு (Tariff war) எதிரான ஒரு சுட்டிக்காட்டலாகவே இக்கூட்டுப் பிரகடனம் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் BRICS இன் உறுப்பினரான ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய போர், BRICS குழுவிற்குள் கடுமையான பிளவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. ஒருபுறம், டொனால்ட் ட்ரம்பின் தடைகள் அச்சுறுத்தலையும் மீறி ஈரானுடன் வர்த்தகத்தைத் தொடரும் பெய்ஜிங் மற்றும் மொஸ்கோ ஆகிய நாடுகள் உள்ள நிலையில், மறுபுறம், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், ஆகஸ்ட் மாதத்தில் தெஹ்ரானுடனான வர்த்தக மற்றும் நிதிப் பரிமாற்றங்களை இடைநிறுத்தியதை அடுத்து ஈரான் ஏவுகணைகளின் இலக்காக மாறியது. பின்னர் ஓர்மூஸ் நீரிணையும் மூடப்பட்டது.

2026 மே மாதத்தில், BRICS வெளியுறவு அமைச்சர்களால் கூட்டுப் பிரகடனம் குறித்து உடன்பாட்டை எட்ட முடியாமல் போனது. இம்முறை, அவர்களின் தலைவர்கள் பிராந்தியத்தில் “பதற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை” ஏகமனதாக வெளிப்படுத்த முடிந்தது. இருப்பினும், உச்சிமாநாட்டின் முடிவில் மத்திய கிழக்கு மோதலில் ஈடுபட்டுள்ள இராஜதந்திரக் குழுவின் அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் “அதிகபட்ச சகிப்புத்தன்மையுடன்” செயல்படுமாறு வலியுறுத்தும் கூட்டு கோரிக்கையிலும் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு ரீதியாக, ஷி ஜின்பிங்கின் இந்திய விஜயம், 2019 ஆம் ஆண்டில் இமயமலை எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பெய்ஜிங்கிற்கும் புதுடில்லிக்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர தொடர்புகளின் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தன. இரு நாடுகளும் தங்களது இருதரப்பு உறவை மீண்டும் சீரான பாதைக்குக் கொண்டுவந்துள்ளன, ஆனால் இன்னும் பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின்மை காணப்படுகிறது.

இருப்பினும், செப்டம்பர் 12 சனிக்கிழமையன்று சீன ஜனாதிபதியும் பிரதமரும் நடத்திய இராஜதந்திர சந்திப்பில், “நேர்மையான, நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்தனர்” என்று இந்திய இராஜதந்திரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

உச்சிமாநாட்டின் பரந்த பொது அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை, BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுப் புகைப்படத்திற்குத் தோற்றமளித்தனர். BRICS அமைப்பில் எகிப்து, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.

Filed Under: உலகம், கட்டுரைகள், செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • …
  • 586
  • Next Page »

Recent Posts

  • நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
  • கரன்னாகொட மற்றும் யோஷிதவிற்கு எதிரான வழக்கு: வழக்குக்கு முந்திய மாநாட்டிற்கு அழைப்பு!
  • ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
  • நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.