கோத்தாவை காட்டிக்கொடுத்தது குடும்பத்தின் உள்வீட்டுச் சதி!

Wimal Gammanpila 2022.03.03 (1)

ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்காகவே கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான பலமான சான்றுகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எதிராக ஷிரந்தி மற்றும் மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை அக்காலகட்டத்தில் தெரியவந்திருந்தது. இருப்பினும், ‘வியத்மக’ அமைப்பை உருவாக்கி அரசியல் களத்தைத் தயார்படுத்தி முன்னேறிய கோத்தாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தனது வேட்பாளர் தனமையை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று அதிகாரத்தை உறுதிப்படுத்திய கோத்தாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்ஷவின் அரசியல் ‘மூத்த அண்ணன்மார்கள்’ என அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உள்வீட்டு மோதல் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்காரணமாக, 2022 மார்ச் 03ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இவ்விருவரும், இனி ஒருபோதும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

எனினும், தற்போது கோத்தாபய ராஜபக்ஷவை முற்றாகக் கைவிட்டுவிட்டு, இவர்கள் இருவரும் உள்ளிட்ட குழுவினர் நாமல் ராஜபக்ஷவுடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்