அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்புச் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 70 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டிருந்தன.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்மானித்திருந்தது.
11










