உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பல அபிவிருத்தியடைந்த நாடுகளிலும்கூட காட்டுத்தீ பேரழிவுகள் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகின்றன.
இந்த இயற்கைப் பேரிடரின் தாக்கம் இலங்கையிலும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக காலநிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில், பொறுப்புள்ள பிரஜைகளாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்துவதுடன், நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கமும் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
இருப்பினும், இயற்கை அசம்பாவிதங்கள் மற்றும் உலகளாவிய யுத்த மோதல்களைக்கூட அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரப் படுத்துவதற்கு முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள், இந்த எல் நினோ அச்சுறுத்தலையும் தமது குறுகிய அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த முயன்று வருகின்றன.
இருப்பினும், உலகில் தற்போது உருவாகியுள்ள உண்மையான நிலவரங்கள் குறித்து பொதுமக்கள் சரியான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில் காணொளி ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.










