Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெறவே வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு: சி.வி.விக்னேஸ்வரன்

15/02/2021 Leave a Comment


ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது. அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.


முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதுஎனது கருத்து.


தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின்ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது. எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.
எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.


இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது. அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.


– தினக்குரல் செய்திகள் 

Filed Under: செய்திகள்

பாடசாலைச் சென்ற முதல் நாளில் லொறிக்கு பலியாகியச் சிறுவன்… பதுளையில் துயரசம்பவம்…

15/02/2021 Leave a Comment


இவ்வாண்டில் இன்று (15) ஆரம்பமான முதலாம் தர வகுப்பில் சேர்வதற்காக தனது பாட்டியுடன் பாடசாலைக்குச் சென்ற 06 வயது சிறுவன் மீது லொறி மோதியதில் குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் சென்ற சிறுவனின் பாட்டி படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.


பதுளை, அசேலபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வருண் பிரதீப் என்ற சிறுவனே இவ்வாறு அகாலமரணம் அடைந்துள்ளார். பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 01 இல் சேர்வதற்குச் சென்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Filed Under: செய்திகள்

1000 ரூபாவுக்கு என்னவாகும்? சம்பள நிர்ணய சபையின் திட்டத்தை வர்த்தமானியில் வெளியிட மேலும் 02 வாரங்கள்…

15/02/2021 Leave a Comment


தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மேலும் இரு வாரகாலம் செல்லும் என்றும், அதுபற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (15) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என்றும்  தொழில் ஆணையாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


அவர் மேலும்..

இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக சம்பள நிர்ணய சபை இந்த வார இறுதியில் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

ஒருபோது நாட்டை மூடமாட்டோம் – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே

15/02/2021 Leave a Comment

வேகமாகப் பரவிச்செல்லும் புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக நாட்டை ஒருபோதும் மூடப்பபோவதில்லை என்று இராஜாங்க அமைச்சர்  சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

‘மவ்பிம’ சிங்கள மொழிப் பத்திரிகையிடமே அவர் மேற்கண்டவாறும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் நாட்டை மூடமாட்டோம். ஆனால், விரைவில் சில பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப்போகிறோம். அதுபற்றிய விசேட கலந்துரையாடல் இன்று (15) சுகாதாரத் தலைவர்களுடன் இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Filed Under: செய்திகள்

உலக இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு 03 வெள்ளிப்பதக்கங்களும் 03 வெண்கலப்பதக்கங்களும் வசம்…

15/02/2021 Leave a Comment

உலக இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (Paralympic Games) திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கங்கள் 03 ஐயும், வெண்கலப்பதக்கங்கள் 03 ஐயும் இலங்கை அணி வென்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இப்போட்டி நேற்றைய தினம் (14) நிறைவடைந்தது.

Filed Under: ஆடுகளம்

இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி?

15/02/2021 Leave a Comment

இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் நேபாளத்தில் கட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்த அவர், இலங்கையில் கட்சியை ஆரம்பித்த பின்னர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியை உலகளாவிய கட்சியாக மாற்றும் நோக்கத்தில் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

இலங்கை என்ற நாட்டின் பெயரை ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்ற வேண்டும் – உதய கம்மன்பில

15/02/2021 Leave a Comment


உத்தேச புதிய அரசியலமைப்பில் இலங்கையின் பெயர் ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்றப்பட வேண்டும். நாட்டின் ஆட்சி முறைமைய ஒற்றையாட்சி என்பதை அரசியமைப்பின் தமிழ் மொழி பிரதிகளிலும் மிக தெளிவாக குறிப்பிடுதல் அவசியமாகும். இல்லாவிடின் ஒரு தரப்பினர் சொற்பதங்களை கொண்டு வாதப் பிரதிவாதங்களை முன்வைப்பார்கள் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவிடம் பிவிதுறு ஹெல உருமய கட்சி முன்வைக்கும் யோசனைகளை  வெளிப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று  முன்தினம் (13) பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன…

  • அரசியமைப்பின் தமிழ் மொழி பிரதியில் இலங்கை ஒற்றையாட்சி முறைமையினை கொண்ட நாடு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆங்கில மொழியிலும் அவ்வாறான தன்மையே காணப்பட வேண்டும். சொற்பதற்களை கொண்டு இன்றும் ஒரு தரப்பினர் இலங்கை ஒற்றையாட்சி முறைமையினை கொண்ட நாடு அல்ல என்று வாதிட்டுக் கொள்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அழிக்கும் பொறிமுறை புதிய அரசியமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
  • பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை முன்னெடுக்கும் நாடுகளை காட்டிலும் இலங்கையின் பௌத்த மதம் பழமையானதாக காணப்படுகிறது. 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட கால பின்னணியை இலங்கையின் பௌத்த மதம் கொண்டுள்ளது. ஆகவே பௌத்த மதத்தை பிரதான அரச மதமாக அங்கிகரித்து பிரகடனப்படுத்த வேண்டும். பௌத்த மதத்தை பாதுகாத்தல், வளர்ச்சி பெற  செய்தல் ஆகியவற்றுக்கு அரசியமைப்பின் ஊடாக விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.செயற்படுத்தப்படும் விடயங்களை கண்காணிக்க விசேடநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
  • தேவையற்ற செலவினை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தல் முறைமை காணப்படுகிறது. ஜனாதிபதி பாராளுமன்றில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்  பிரதம வேட்பாளரை அறிவிக்கும் வகையில் தங்களின் ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிக்க வேண்டும்.பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்ற கட்சி தாம் அறிவித்த ஜனாதிபதி  வேட்பாளரை ஜனாதிபதியாக தெரிவு செய்துக் கொள்ளாம். 
  • ஒருவர் இரண்டு தடவை மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று  19 ஆவது திருத்ததிலும், 20 ஆவது திருத்தத்திலும் காணப்படும் தடை புதிய அரசியமைப்பில் நீக்கப்பட வேண்டும்.
  • மாவட்ட மட்டத்தில் உள்வாங்கப்படும் தெரிவு முறைமை நீக்கப்பட்டு தேசிய மட்டத்திலான தெரிவு முறைமை உள்வாங்கப்பட வேண்டும். 

Filed Under: செய்திகள்

நேற்றைய தினம் 802 புதிய கொரோனா நோயாளர்கள்…

15/02/2021 Leave a Comment

இலங்கையில் நேற்றைய தினம் 802 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 75,654 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று (14) இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 இல் இருந்து 397 ஆக அதிகரித்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

14/02/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=66

Filed Under: Cartoons

குற்றவாளியைத் தப்பிக்கவிட்டு பாதிக்கப்பட்டவரைத் தண்டித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

14/02/2021 Leave a Comment

இன்னும் நீங்கள் நியாயத்தைத் தேடுகின்றீர்கள். உனது முஸ்லிம் தீவிரவாதக் கொலைகாரன் பல வருடங்களாக இந்த நாட்டில் ஆயுதக் குழுக்களைத் திரட்டியிருந்தான். முஸ்லிம் சமூகத்தினர் அவர்களைப் பற்றி அடிக்கடி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் தொடர்ந்தும் அந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணை கிடைத்துள்ளது.

தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முதல் தாக்குதல் நடைபெறும்போது கூட அன்றைய அரசாங்கம் அறிந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

சாதாரண குடிமக்கள் செய்யும் குற்றச் செயல்களின் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அரசாங்கத்தின் அனுசரனையுடன் நடைபெறும் குற்றங்களுக்கான பொறுப்புதாரிகள் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். ஏனெனில், ஆட்சியாளர் என்போர் ஒரே குழுவினர் ஆவர்.

மக்களின் சந்தோஷங்களும் சோகங்களும் அரசியல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும் ஒருபோதும் நியாயம் கிடைக்கப்போவதில்லை.இன்றைய அரசாங்கத்திடம் நான் எதிர்பார்க்கும் விடயம் என்னவென்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பங்களிப்பு செய்தவர்களையும் அரச அனுசரனையை வழங்கியவர்களையும் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதுதான் மரணித்தவர்களுக்குக் கிடைக்கும் சமூகப் பெறுமானமாகும். அவர்களின் உயிர் துறப்பு நியாயமுள்ள சமூகமொன்றில் முடிவுற வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டும்.அரசியல் ரீதியாக எவ்வளவு வேறுபட்டாலும் தற்போதைய ஜனாதியிடம் நான் வைத்திருக்கும் ஒரேயொரு எதிர்பார்ப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட நெத்தலி மீனிலிருந்து திமிங்கிலம் வரை அனைவரையும் வெளிப்படுத்துவதாகும். அவர் அதை செய்யவில்லை என்றால், தான் அதிகாரத்துக்கு வருவதற்கு பயன்படுத்திய இன்னுமொரு நாடகமாக உயிர்த்த ஞாயிறு சம்பவம் வரலாற்றில் இடம்பிடித்துவிடும்.பல்வேறு சமூகங்களை பிரித்து வேறுபடுத்துவதற்கு இதுபோன்ற தந்திரங்கள் வரலாறு முழுவதும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவினையை தடுத்து நிறுத்துவதற்கு இருக்கும் ஒரேயொரு வழிமுறை; சட்டத்தின் நியாய ஆட்சி மட்டும் தான்.

சதுரங்க அபேசிங்க (Chaturanga Abeysinghe)


பிரதியை எழுதிய – திட்டமிட்ட – இயக்கிய கைகள் மறைவானவை அல்ல.அக் கைகள் தான் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் தேடிய ராஜபக்ஷகளும், வங்குரோத்து அரசியலினால் நடைபெற்ற ஊழல் மோசடிகளை மூடிமறைப்பதோடு பாதுகாப்பைப் பெறுவதற்காக மொத்த நாட்டையே காட்டிக்கொடுத்த ரனில் உட்பட ஐக்கிய தேசிய கட்சியும், இவர்களுடன் இணைந்துகொண்ட மைத்திரீபால சிரிசேனயும்.இந்த முக்கூட்டு சேர்ந்து உருவாக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட அரசியல் சமூக நிலைமையில் ஏமாற்றம் அடைந்த 69 இலட்சத்தின் (மொட்டுக்கு வாக்களித்த) ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரத்தத்தை தமது கைகளில் தடவிக்கொண்டனர

தர்ஷண டயஸ் (Darshana Dias)


வேண்டுமென்றே தெரிந்துகொண்டு குண்டு வெடிக்கச் செய்து தோல்வியடைவதற்கு ரனிலுக்கு பைத்தியம் கிடையாது. மைத்திரீபாலயும் ராஜபக்ஷகளும் நிச்சயமாக இதை அறிவார்கள்.நாமல் குமாரவின் (மைத்திரீபால ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதி நடைபெறுவதாகக் கூறியவன்) வௌியிட்ட ஒலிநாடாக்கள் நினைவிருக்கின்றதா? மைத்திரிபால மஹிந்தவை பிரதமராக்கியவுடன் கூறினான், “தொடர் குண்டுகளை வெடிக்கச் செய்தாவது அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்”.சஹரானைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்த நாலக சில்வா (முன்னாள் பொலிஸ் மா அதிபர்) பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றார். தாக்குதலுக்கு மறுதினம் கோதாபய இலங்கைக்கு வந்திறங்குகினார

தினேஷ் காஞ்சன (Dinesh Kanchana)


“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றவுடன், அப்போதைய ரனில் – மைத்திரீ அரசாங்கத்துக்கும் எதிர்கட்சியில் இருந்த ராஜபக்ஷகளுக்கும் தெரிந்துதான் இத் தாக்குதல் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு நாடளாவிய ரீதியில் வேகமாகவும் உறுதியாகவும் எழுந்தன.

உடனே, முஸ்லிம் பெண்களின் ஆடை பர்தா – அபாயா பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்ற கருத்து இனவாத ஊடகங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. அனைவருடைய கவனமும் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் அணிகளில் இருந்து திசை திரும்பி பர்தாவின் பின்னால் சென்றது.இவ்வாறுதான், அரசியல்வாதிகள் தமக்கு பாதிப்பு வரும்போது மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள்”.

கல்கந்தே தம்மானந்த தேரர்


இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பற்றி, வெளிநாட்டு ஒற்றர் சேவைகள் பல இந்நாட்டில் செயல்பட்ட போதிலும் அவர்களுக்கு தாக்குதல் தொடர்பாக ஒரு துரும்புத் தகவல் கூட கிடைக்காத நிலையில், மிகச் சரியாக தெரிந்துவைத்திருந்து கூறியது யார்? இந்தியா!

உயிர்ந்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்திய தினம் நடைபெற்ற இறுதி பாதுகாப்பு ஆலோசனைச் சபைக் கூட்டத்துக்கு வந்திருந்த வெளிநாட்டு இராஜதந்திரி எந்த நாட்டிலிருந்து வந்தார்? இந்தியா!2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்தது யார்? இந்தியா!ஐனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, 10 நாட்களில், இலங்கை ஜனாதிபதி சென்ற நாடு எது? இந்தியா!நீர்கொழும்பு கடுவாப்பிட்டி ஆலய குண்டுதாரியின் மனைவியும் சஹரான் குழுவில் சத்திய பிரமாணம் செய்தவர் எனக் கருதப்படும் ‘சாரா’ பாதுகாப்பாக தங்கியிருக்கும் நாடு எது? இந்தியா!நமது மக்கள் இந்த அரசியலை எப்போதான் படிப்பார்களோ ?

ஷெஹான் மாலக கமகே (Shehan Malaka Gamage)

Filed Under: கட்டுரைகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 563
  • 564
  • 565
  • 566
  • 567
  • Next Page »

Recent Posts

  • போதைப்பொருள் கடத்தலுக்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரை மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்
  • 22 இலட்சம் பேர் தொடர்பான புதிய தகவல்
  • ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு
  • இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
  • மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.