தெஹிவள, ஓபன் பகுதியில் வசித்து வந்த ‘கொஸ் மல்லி’யின் மைத்துனரான ‘பூத களுவா’ நேற்று (7) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான அவர், சில காலம் ‘கொஸ் மல்லி’யுடன் துபாயில் வசித்து வந்துள்ளார். பக்கவாத நோய் தீவிரமடைந்ததன் காரணமாக, சில வாரங்களுக்கு முன்னரே அவர் இலங்கைக்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலை ‘படோவிட்ட அசங்க’வின் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நால்வர் அடங்கிய குழுவினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அவரை ஆயுதங்களால் வெட்டித் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.



