‘பஸ் லலித்’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி, 2013ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் குற்றவாளி நாட்டைவிட்டு தப்பிச் சென்று துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பட்டாசுகளும் கொளுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஹங்வெல்ல, தித்தெனிய பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள் தொடர்பில் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.









