ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (13) நடைபெறுகிறது.
இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இப்போட்டி துபாயில் நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை மகளிர் அணி 9.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.










