24 லட்சத்திலிருந்து 12 லட்சமாகக் குறைப்பு!

Queue 2026.09.13 (1)

அரசாங்கத்தால் பெறப்படும் வரி வருமானத்தை பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளுக்காகச் செலவிடும்போது, தகுதியான பயனாளிகளைச் சரியாக இனங்கண்டு அவர்களை வலுவூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டில் ‘அஸ்வசும’ நலன்புரி உதவியைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2,439,917 ஆகக் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதமளவில் அந்த எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைவடைந்துள்ளது. இதுவரைக்காலமும் போலித் தகவல்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமான முறையில் உதவிகளைப் பெற்று வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கியதன் மூலமே அஸ்வசும உதவியைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை பாதியளவு வரை குறைந்துள்ளது.

இம்மாத இறுதி வரை அஸ்வசும நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக அடையாளம் காணப்படும் தகுதியுடைய குறிப்பிட்ட குடும்பங்கள் புதிதாக இணைக்கப்படலாம் என நிதி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரி செலுத்தும் மக்கள் மீது சுமையைச் சுமத்தி முறையற்ற வகையில் நிவாரணங்கள் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் பிரசாரங்கள் எவ்வித ஆதாரமுமற்றவை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த முடிவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்