உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (15) அமைச்சரவை கூடியபோது சமர்ப்பிக்கப்படவில்லை.
பெப்ரவரி 01 ஆம் திகதி குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் அங்கத்தவராகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. அந்நேரம் அரசாங்கம் இதுபற்றிய முடிவினை எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டப்படும் என்றது.
அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டப் பின்னர் மூன்று தடவைகள் அமைச்சரவை கூட்டடங்கள் கூட்டப்பட்டன. அதிலொன்றிலும் இந்த அறிக்கை குறித்து பேசப்படவில்லை.
நேற்று அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி அவர்கள் “ஆணைக்குழுவின் அறிக்கை நிறைய பக்கங்களைக் கொண்டுள்ளதால் அதனைப் பிரதி எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் எடுக்கும்” எனக் கூறியிருந்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன.
4










