Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

மோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு !

14/02/2021 Leave a Comment

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை பேசப்படும் இந்தியா உலகளாவிய ஜனநாயகக் குறியீட்டில் ஒவ்வொரு ஆண்டும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான ஜனநாயகக் குறியீட்டுப் பட்டியலில் 53-ம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

சர்வதேச ஆய்வு நிறுவனமான ”தி எக்கனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட்” என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நாடுகளின் ஜனநாயகத் தன்மையை பரிசீலித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான ஜனநாயக குறியீட்டு தரப் பட்டியலில் முதலிடத்தை நார்வே பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை முறையே ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

Filed Under: உலகம்

பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை

14/02/2021 Leave a Comment

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு விமர்சித்திருக்கிறது.

சீன அரசின் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாக பிபிசி தெரிவித்திருக்கிறது.

பிரிட்டனில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை அமைந்திருக்கிறது.

Filed Under: உலகம்

பிளவுபடுமா முற்போக்கு கூட்டணி – ராதா தனி வழியா?

14/02/2021 Leave a Comment

மலையக மக்கள் முன்னணியின் அண்மைக்கால செயற்பாடுகளினால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை, முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்திய நிர்வாகக்குழு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைத்தும் இன்னும் அது செயற்படுத்தப்படவில்லை எனவும் மற்றும் சம்பள உயர்வு போராட்டத்துக்கான ஆதரவையும் மலையக மக்கள் முன்னணி தன்னிச்சையாக வெளியிட்டதாலும் தமிழ் முற்போக்கு கூட்ட்டணிக்குள் முறுகல்நிலை தோன்றியுள்ளதாக அறியமுடிகிறது.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

Filed Under: செய்திகள்

தேர்தலை வெற்றிபெற்ற பின் அரசாங்கம் கொரொனா தடுப்பைக் கைவிட்ட விதம் இதோ…

14/02/2021 Leave a Comment

கடந்த பொதுத் தேர்தல் வரை இந் நாட்டில் கொரொனா பரவுதல் பாரியளவில் கட்டுப்பாட்டில் இருந்து தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் மீது கொரொனா கட்டுப்படுத்தலின் முழுப் பொறுப்பைச் சுமத்திவிட்டு அரசாங்கம் கைகழுவிக் கொண்டதனால் இன்று நாட்டுக்குள் மிக பயங்கரமாக கொரொனா வைரசு பரவியுள்ளது.

பெப்ரவரி 08 ஆகும்போது வைரசு தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 எல்லையைக் கடந்திருந்ததுடன், 2020 பெப்ரவரி 15 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இந் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஆகஸ்டு 05 பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2,839 ஆக இருந்தது. அன்றிலிருந்து ஒக்டோபர் 30 ஆகும்போது தொற்றாளர் எண்ணிக்கை 10,000 எல்லையை தாண்டியதுடன் சுமார் மூன்று மாத காலத்துக்குள்; பொதுத் தேர்தலின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை 7,585 இனால் அதிகரித்துள்ளது.

தொற்றாளர் எல்லை 10,000 தாண்டிய் நாட்கள் பின்வருமாறு2020 பெப்ரவரி 15 முதல் 2020 ஒக்டோபர் 30 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 10,242 ஆகுவதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 257.

ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 22 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 20,171 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 23. இக் காலப் பகுதிக்குள் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,747.நவம்பர் 22 முதல் டிசம்பர் 09 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 30,072 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,901.டிசம்பர் 09 முதல் டிசம்பர் 26 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 40,380. எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவானவர்களின் எண்ணிக்கை 10.308.

டிசம்பர் 26 முதல் 2021 ஜனவரி 13 வரை 50,229 ஆனது. எடுத்துக்கொண்ட நாட்கள் 18. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,849.

ஜனவரி 13 முதல் 27 வரை 60,694. எடுத்துக்கொண்ட நாட்கள் 14. பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 10,465.

ஜனவரி 27 முதல் பெப்ரவரி 11 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 73,166. எடுத்துக்கொண்ட நாட்கள் 15. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 12,472 ஆகும்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 565
  • 566
  • 567

Recent Posts

  • போதைப்பொருள் கடத்தலுக்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரை மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்
  • 22 இலட்சம் பேர் தொடர்பான புதிய தகவல்
  • ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு
  • இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
  • மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.