தேர்தலை வெற்றிபெற்ற பின் அரசாங்கம் கொரொனா தடுப்பைக் கைவிட்ட விதம் இதோ…

gottabaya 14.02.2021

கடந்த பொதுத் தேர்தல் வரை இந் நாட்டில் கொரொனா பரவுதல் பாரியளவில் கட்டுப்பாட்டில் இருந்து தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் மீது கொரொனா கட்டுப்படுத்தலின் முழுப் பொறுப்பைச் சுமத்திவிட்டு அரசாங்கம் கைகழுவிக் கொண்டதனால் இன்று நாட்டுக்குள் மிக பயங்கரமாக கொரொனா வைரசு பரவியுள்ளது.

பெப்ரவரி 08 ஆகும்போது வைரசு தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 எல்லையைக் கடந்திருந்ததுடன், 2020 பெப்ரவரி 15 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இந் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஆகஸ்டு 05 பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2,839 ஆக இருந்தது. அன்றிலிருந்து ஒக்டோபர் 30 ஆகும்போது தொற்றாளர் எண்ணிக்கை 10,000 எல்லையை தாண்டியதுடன் சுமார் மூன்று மாத காலத்துக்குள்; பொதுத் தேர்தலின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை 7,585 இனால் அதிகரித்துள்ளது.

தொற்றாளர் எல்லை 10,000 தாண்டிய் நாட்கள் பின்வருமாறு2020 பெப்ரவரி 15 முதல் 2020 ஒக்டோபர் 30 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 10,242 ஆகுவதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 257.

ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 22 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 20,171 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 23. இக் காலப் பகுதிக்குள் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,747.நவம்பர் 22 முதல் டிசம்பர் 09 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 30,072 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,901.டிசம்பர் 09 முதல் டிசம்பர் 26 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 40,380. எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவானவர்களின் எண்ணிக்கை 10.308.

டிசம்பர் 26 முதல் 2021 ஜனவரி 13 வரை 50,229 ஆனது. எடுத்துக்கொண்ட நாட்கள் 18. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,849.

ஜனவரி 13 முதல் 27 வரை 60,694. எடுத்துக்கொண்ட நாட்கள் 14. பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 10,465.

ஜனவரி 27 முதல் பெப்ரவரி 11 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 73,166. எடுத்துக்கொண்ட நாட்கள் 15. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 12,472 ஆகும்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்