நீதிபதிகள் வருமான வரி செலுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன, ஜனக் டி சில்வா, மஹிந்த சமயவர்த்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்குமாறு கோரி நீதித்துறை அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்தே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி, மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் வருமான வரி செலுத்தப் பிணைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

























