Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

நேற்றைய தினம் 802 புதிய கொரோனா நோயாளர்கள்…

15/02/2021 Leave a Comment

இலங்கையில் நேற்றைய தினம் 802 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 75,654 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று (14) இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 இல் இருந்து 397 ஆக அதிகரித்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

14/02/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=66

Filed Under: Cartoons

குற்றவாளியைத் தப்பிக்கவிட்டு பாதிக்கப்பட்டவரைத் தண்டித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

14/02/2021 Leave a Comment

இன்னும் நீங்கள் நியாயத்தைத் தேடுகின்றீர்கள். உனது முஸ்லிம் தீவிரவாதக் கொலைகாரன் பல வருடங்களாக இந்த நாட்டில் ஆயுதக் குழுக்களைத் திரட்டியிருந்தான். முஸ்லிம் சமூகத்தினர் அவர்களைப் பற்றி அடிக்கடி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் தொடர்ந்தும் அந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணை கிடைத்துள்ளது.

தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முதல் தாக்குதல் நடைபெறும்போது கூட அன்றைய அரசாங்கம் அறிந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

சாதாரண குடிமக்கள் செய்யும் குற்றச் செயல்களின் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அரசாங்கத்தின் அனுசரனையுடன் நடைபெறும் குற்றங்களுக்கான பொறுப்புதாரிகள் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். ஏனெனில், ஆட்சியாளர் என்போர் ஒரே குழுவினர் ஆவர்.

மக்களின் சந்தோஷங்களும் சோகங்களும் அரசியல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும் ஒருபோதும் நியாயம் கிடைக்கப்போவதில்லை.இன்றைய அரசாங்கத்திடம் நான் எதிர்பார்க்கும் விடயம் என்னவென்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பங்களிப்பு செய்தவர்களையும் அரச அனுசரனையை வழங்கியவர்களையும் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதுதான் மரணித்தவர்களுக்குக் கிடைக்கும் சமூகப் பெறுமானமாகும். அவர்களின் உயிர் துறப்பு நியாயமுள்ள சமூகமொன்றில் முடிவுற வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டும்.அரசியல் ரீதியாக எவ்வளவு வேறுபட்டாலும் தற்போதைய ஜனாதியிடம் நான் வைத்திருக்கும் ஒரேயொரு எதிர்பார்ப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட நெத்தலி மீனிலிருந்து திமிங்கிலம் வரை அனைவரையும் வெளிப்படுத்துவதாகும். அவர் அதை செய்யவில்லை என்றால், தான் அதிகாரத்துக்கு வருவதற்கு பயன்படுத்திய இன்னுமொரு நாடகமாக உயிர்த்த ஞாயிறு சம்பவம் வரலாற்றில் இடம்பிடித்துவிடும்.பல்வேறு சமூகங்களை பிரித்து வேறுபடுத்துவதற்கு இதுபோன்ற தந்திரங்கள் வரலாறு முழுவதும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவினையை தடுத்து நிறுத்துவதற்கு இருக்கும் ஒரேயொரு வழிமுறை; சட்டத்தின் நியாய ஆட்சி மட்டும் தான்.

சதுரங்க அபேசிங்க (Chaturanga Abeysinghe)


பிரதியை எழுதிய – திட்டமிட்ட – இயக்கிய கைகள் மறைவானவை அல்ல.அக் கைகள் தான் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் தேடிய ராஜபக்ஷகளும், வங்குரோத்து அரசியலினால் நடைபெற்ற ஊழல் மோசடிகளை மூடிமறைப்பதோடு பாதுகாப்பைப் பெறுவதற்காக மொத்த நாட்டையே காட்டிக்கொடுத்த ரனில் உட்பட ஐக்கிய தேசிய கட்சியும், இவர்களுடன் இணைந்துகொண்ட மைத்திரீபால சிரிசேனயும்.இந்த முக்கூட்டு சேர்ந்து உருவாக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட அரசியல் சமூக நிலைமையில் ஏமாற்றம் அடைந்த 69 இலட்சத்தின் (மொட்டுக்கு வாக்களித்த) ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரத்தத்தை தமது கைகளில் தடவிக்கொண்டனர

தர்ஷண டயஸ் (Darshana Dias)


வேண்டுமென்றே தெரிந்துகொண்டு குண்டு வெடிக்கச் செய்து தோல்வியடைவதற்கு ரனிலுக்கு பைத்தியம் கிடையாது. மைத்திரீபாலயும் ராஜபக்ஷகளும் நிச்சயமாக இதை அறிவார்கள்.நாமல் குமாரவின் (மைத்திரீபால ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதி நடைபெறுவதாகக் கூறியவன்) வௌியிட்ட ஒலிநாடாக்கள் நினைவிருக்கின்றதா? மைத்திரிபால மஹிந்தவை பிரதமராக்கியவுடன் கூறினான், “தொடர் குண்டுகளை வெடிக்கச் செய்தாவது அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்”.சஹரானைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்த நாலக சில்வா (முன்னாள் பொலிஸ் மா அதிபர்) பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றார். தாக்குதலுக்கு மறுதினம் கோதாபய இலங்கைக்கு வந்திறங்குகினார

தினேஷ் காஞ்சன (Dinesh Kanchana)


“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றவுடன், அப்போதைய ரனில் – மைத்திரீ அரசாங்கத்துக்கும் எதிர்கட்சியில் இருந்த ராஜபக்ஷகளுக்கும் தெரிந்துதான் இத் தாக்குதல் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு நாடளாவிய ரீதியில் வேகமாகவும் உறுதியாகவும் எழுந்தன.

உடனே, முஸ்லிம் பெண்களின் ஆடை பர்தா – அபாயா பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்ற கருத்து இனவாத ஊடகங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. அனைவருடைய கவனமும் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் அணிகளில் இருந்து திசை திரும்பி பர்தாவின் பின்னால் சென்றது.இவ்வாறுதான், அரசியல்வாதிகள் தமக்கு பாதிப்பு வரும்போது மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள்”.

கல்கந்தே தம்மானந்த தேரர்


இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பற்றி, வெளிநாட்டு ஒற்றர் சேவைகள் பல இந்நாட்டில் செயல்பட்ட போதிலும் அவர்களுக்கு தாக்குதல் தொடர்பாக ஒரு துரும்புத் தகவல் கூட கிடைக்காத நிலையில், மிகச் சரியாக தெரிந்துவைத்திருந்து கூறியது யார்? இந்தியா!

உயிர்ந்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்திய தினம் நடைபெற்ற இறுதி பாதுகாப்பு ஆலோசனைச் சபைக் கூட்டத்துக்கு வந்திருந்த வெளிநாட்டு இராஜதந்திரி எந்த நாட்டிலிருந்து வந்தார்? இந்தியா!2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்தது யார்? இந்தியா!ஐனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, 10 நாட்களில், இலங்கை ஜனாதிபதி சென்ற நாடு எது? இந்தியா!நீர்கொழும்பு கடுவாப்பிட்டி ஆலய குண்டுதாரியின் மனைவியும் சஹரான் குழுவில் சத்திய பிரமாணம் செய்தவர் எனக் கருதப்படும் ‘சாரா’ பாதுகாப்பாக தங்கியிருக்கும் நாடு எது? இந்தியா!நமது மக்கள் இந்த அரசியலை எப்போதான் படிப்பார்களோ ?

ஷெஹான் மாலக கமகே (Shehan Malaka Gamage)

Filed Under: கட்டுரைகள்

14/02/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=58

Filed Under: Cartoons

அதிகமாக ஆடாதீங்கன்னு எச்சரித்தேன்; நினைவிருக்கிறதா? இந்திய அணியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன்

14/02/2021 Leave a Comment

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாக ஆடாதீங்க, கொண்டாடாதீங்க என்று உங்களை எச்சரித்தேன். நினைவிருக்கிறதா? என்று இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கிண்டலடித்துள்ளார்.

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 420 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து 277 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்களும், கில் 50 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்றினர். கேப்டன் கோலி தலைமையில் சந்திக்கும் தொடர் 4-வது தோல்வியாகும்.

ஆஸ்திரேலிய பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி, நாடு திரும்பியது. அந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அணி இருந்தபோது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை எழுப்பியது.

அதில், “அனைத்துத் தடைகளையும் கடந்து ஆஸ்திரேலியத் தொடரை வென்றதால், இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும்.

ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” என இங்கிலாந்து அணியின் வருகையை குறிப்பிட்டு பீட்டர்ஸன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, பீட்டர்ஸன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

அதில், “இந்திய அணி வீரர்களை நான் இதற்கு முன் உங்களை எச்சரித்திருந்தேன். நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாகக் கொண்டாடாதீர்கள், ஆடாதீர்கள் என்று எச்சரித்திருந்தேன் நினைவிருக்கிறதா” எனக் கேட்டு கிண்டல் செய்துள்ளார்.

இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் சென்று பெறும் 6-வது வெற்றி இதுவாகும். இற்கு முன் தென் ஆப்பிரிக்கா, இலங்கையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

Filed Under: ஆடுகளம்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்…

14/02/2021 Leave a Comment

இந்தோனேசியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு 7.52 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

தென்மேற்கு எங்கானோ தீவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும், கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட வில்லை.

நல்வாய்ப்பாக இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: உலகம்

உயிர்த்த_ஞாயிறு_தாக்குதலுக்குப் பதில் இல்லையேல் நான் சர்வதேச நீதிமன்றம் செல்வேன் – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

14/02/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்று (11) பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராயர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றை தான் ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

சில விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக எமக்கு இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விரைவில் குறித்த பிரதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும். அப்பொழுது எமக்கு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.” என்றார்.

Filed Under: செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி அறிக்கையை மறைத்துக்கொண்டிருப்பது ஏன்?

14/02/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அவ்வறிக்கையை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்வாகத்திடமோ அல்லது பொதுமக்களிடமோ வெளிப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

கடந்த தினத்தில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் கடிதமொன்றைக் கொடுத்தனுப்பி, ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக முன்னெடுக்கப்படவிருக்கும் ஆராய்வு அலுவல்களுக்காக குறித்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தார்.

குறித்த அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்ட பின்னர் இரண்டு அமைச்சரவை கூட்டங்களை நடத்தியபோதிலும், அதில் அறிக்கை குறித்து எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. அறிக்கை குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டம் கூடும் என்று அறிவிக்கப்பட்டபோதும், இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதிலும், அரசாங்கம் அதைச் செயற்படுத்தவில்லை. அதேநேரம், மெல்கம் கார்த்தினால் ரஞ்சித் ஆண்டகை குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றைத் தனக்கு தருமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அதுவும் வழங்கப்படவில்லை.

250 உயிர்களைக் காவுகொண்ட இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொலிஸ்மா அதிபரிடமும், சட்டமா அதிபரிடமும், நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும், ஆண்டகையிடமும் மற்றும் மக்களிடமும் வழங்க அரசாங்கம் இவ்வாறு தாமதிப்பது ஏன்? எதனால்?

Filed Under: செய்திகள்

பங்குச் சந்தையை மீண்டும் பாரிய டீல்காரர்கள் கைபற்றியுள்ளனர்

14/02/2021 Leave a Comment

மீண்டும் பங்குச் சந்தையை பாரிய டீல்காரர்கள் கைபற்றியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க 2021.02.12 கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

முன்னாள் வங்கித் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அஜிட் நிவாட் கப்ராலின் வழமையான சூதாட்டம் பங்குச் சந்தையில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

“இற்றைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் முதலாம் இடத்தில் இருந்த பங்குச் சந்தையை நடத்த முடியாமல் மூடும் நிலை ஏற்பட்டது எவ்வாறு? ஆயின் உண்மையான நிலை இன்றா, அல்லது நேற்றா?இங்கு நடைபெறுவது என்னவென்றால், அரசாங்கம் தலையிட்டு செயற்கை தன்மையொன்றை உருவாக்குகின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது தாங்க முடியாத அந்த செயற்கை தன்மை வெடித்துச் சிதறுவது.

அதனால் நாங்கள் அரசாங்கத்திடம் கூறுவது என்னவென்றால் புள்ளி விவரங்களை மூடி மறைத்தல், புள்ளி விவரங்களில் செய்யும் சித்து விளையாட்டுக்கள் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. பங்குச் சந்தையில் இருந்து கிடைக்கும் செய்தி யதார்த்த நிலைக்கு வாருங்கள் என்பதாகும்.

இதனால் நஷ்டம் ஏற்பட்டது பாரிய டீல்காரர்களுக்கு அல்ல. ஊழியர் சேமலாப நிதியை எடுத்து, அல்லது காணியொன்றை விற்று பணத்தைப் பெற்று வங்கியில் வட்டி குறைவு என்பதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த சிறியவர்களுக்கு இந்த ஊதலில் சிக்கிக்கொண்டதால் சிறிய அளவில் பங்குச் சந்தையுடன் தொடர்புபட்டவர்களின் பணம் இழந்துபோயுள்ளது.

எனவே, அரசாங்கம் செயற்கையாக உருவாக்கும் குமிழிகளின் இரையாக வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்தது.

14/02/2021 Leave a Comment

நாட்டில் மேலும் 940 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 632 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

அத்துடன் 04 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 583
  • 584
  • 585
  • 586
  • Next Page »

Recent Posts

  • நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
  • கரன்னாகொட மற்றும் யோஷிதவிற்கு எதிரான வழக்கு: வழக்குக்கு முந்திய மாநாட்டிற்கு அழைப்பு!
  • ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
  • நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.