எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஊதியத்தில் குறித்த தொகை துண்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை திகாரிகளிடம் 1500 ரூபாவும், கடற்படை சிப்பாய்களிடம் 700 ரூபாவுமே இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக பாடசாலை கல்வி வேலைத்திட்டத்திற்கு இத்தொகை ஒதுக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடற்படை அதிகாரிகளும், சிப்பாய்களும் “தாம் தற்போதும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். அதற்கு மேலதிகமாக பிள்ளைகளின் மேலதிக வகுப்புக்கும், online கல்விக்கும் கிடைக்கின்ற சம்பளத்திலேயே செலவழிக்கிறோம். தவிர, பிள்ளைகளின் பாடசாலை விடயங்களுக்கும் பணம் செலுத்துகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.
