ஆட்சிப்பீடமேறிய எந்தவொரு அரசாங்கமும் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள கரிசனையை சேவையாற்றுவதில் காண்பிக்கவில்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்…
“மலையக மக்களின் வீட்டுத் தேவைகள் இன்னும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. பெருந்தோட்டங்களில் பக்கம் அரசின் பார்வை உரியவாறு விழுவதாக இல்லை. தோட்டத்தில் உள்ள லயன் வீடுகளுக்குக் கூட உறுதியை வழங்க ஆட்சியாளர்கள் பின்னடித்து வருகின்றனர்.” என்றார்.
காலங்காலமாக ஆளும்தரப்புடன் (நல்லாட்சியைத் தவிர) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
