அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் குறித்து அமைக்கப்பட்ட குழுக்கள் சில திரிபுபடுத்தப்பட்ட பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
இருப்பினும், குறித்த நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மையானவர்கள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்களாவர். தற்போதைய தலைமை நீதிபதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டவராவார். அதேபோன்று, நீதிபதி அசல வெங்கப்பலி மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டவர்களாவர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவின் பின்னர் அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டு நியமனம் பெற்றவர்கள் நீதிபதி சம்பத் அபேகோன் மற்றும் நீதிபதி கிஹான் குலதுங்க ஆகிய இருவர் மட்டுமேயாவர். இம்மனுக்கள் இன்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.










