“இதயத்தை” பாதுகாக்க பரந்தளவிலான நடவடிக்கை: நுவரெலியாவை நிலையான சுற்றுலா மண்டலமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!

Nuwaraeliya-2024.11.11-1

மத்திய மலைநாட்டின் நீரேந்து பகுதிகளை விஷேடமாக பாதுகாத்து, நுவரெலியா மாவட்டத்தை நிலையான சுற்றுலா அபிவிருத்தி மண்டலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா நகரத்தின் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல், குடிநீரைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு அமைவாக சூழல் சுற்றுலாத்துறையை இலக்காகக் கொண்ட பரந்தளவிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று கடந்த 28ஆம் திகதி சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, நுவரெலியா மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இம்மாவட்டத்தின் நீரேந்து பகுதிகளுக்குட்பட்ட சுமார் 1,500 ஹெக்டேயர் நிலப்பரப்பை வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்