அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மேலும் மேலதிக திருத்தங்களை (செய்திகளை) இணைப்பதற்காக மோஷனொன்றை (Motion) தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில குழுக்களும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் சில அமைப்புகளும் இந்த திருத்தத்திற்கு எதிராக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன. சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர மற்றும் நாமல் ராஜபக்ஷவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் குழுக்களை அழைத்துக் கொண்டு, பிரதம நீதியரசரின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறான தவறான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
எனினும், குறித்த திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதிலுள்ள உண்மையான நோக்கம் பொதுமக்களுக்கு தெளிவடைந்தது. இதனிடையே, இந்த திருத்தத்திற்கு எதிரான குழுக்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம், முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் குழுக்களில் ஒன்றாக இணைந்திருந்தது.
குறித்த மனுவை உரிய முறையில் தயாரித்து சமர்ப்பிக்கும் பொறுமை அச்சங்கத்தின் சிலருக்கு இல்லாமையினால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவை திருத்துவதற்கும், அதில் விடுபட்ட பகுதிகளை மீண்டும் சேர்ப்பதற்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நேரிட்டுள்ளது.










