தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அரச துறை, முறைசாரா மற்றும் தனியார் துறை, அத்துடன் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து உழைக்கும் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளதுடன், அந்த வருமானத்துக்கு ஏற்ப அவர்களால் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற 2024 செப்டெம்பர் மாத இறுதியில், அரச துறை ஊழியர்களின் பெயரளவு சம்பளச் சுட்டெண் 161.3 அலகுகளாக இருந்தது. அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 70.7 அலகுகளாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், பெயரளவு சம்பளச் சுட்டெண் 192.6 அலகுகளாகவும், அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 77.1 அலகுகளாகவும் அதிகரித்துள்ளது.
முறைசாரா மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயரளவு சம்பளச் சுட்டெண் 2024 செப்டெம்பர் மாத இறுதியில் 181.9 அலகுகளாக இருந்தது. 2026 ஜூன் மாத இறுதியில் அது 207.4 அலகுகளாக அதிகரித்துள்ளது. அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 2024 செப்டெம்பர் மாத இறுதியில் 87.6 அலகுகளாக இருந்த நிலையில், தற்போது 92 அலகுகளாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, விவசாயத் துறை ஊழியர்களின் பெயரளவு சம்பளச் சுட்டெண் 2024 செப்டெம்பர் மாத இறுதியில் 180.1 அலகுகளாக இருந்த நிலையில், தற்போது 207.6 அலகுகளாக அதிகரித்துள்ளது. அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 2024 செப்டெம்பர் மாத இறுதியில் 88.4 அலகுகளாக இருந்ததுடன், தற்போது 92.1 அலகுகளாக அதிகரித்துள்ளது.
கைத்தொழில் துறையிலும் பெயரளவு சம்பளச் சுட்டெண் 180.1 அலகுகளிலிருந்து 209.5 அலகுகளாக அதிகரித்துள்ளது. அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 86.8 அலகுகளிலிருந்து 92.9 அலகுகளாக உயர்ந்துள்ளது.
சேவைத் துறையில் பெயரளவு சம்பளச் சுட்டெண் 184.3 அலகுகளிலிருந்து 201.8 அலகுகளாக அதிகரித்துள்ளது. அதேவேளை, அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 88.8 அலகுகளிலிருந்து 89.5 அலகுகளாக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிடும் மாதாந்த பொருளாதார மதிப்பாய்வு வெளியீட்டில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.










