உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த உன்னதமான மிலாத்-உன்-நபி திருநாளில், அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் போதனைகளையும் பார்க்கும்போது, அவர் சமூக அமைதி, நீதி மற்றும் பன்முகத்தன்மைக்கு அளித்த கௌரவமே முதன்மையாக தனித்து நிற்கிறது. பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மதினா என்ற பன்முக இனச் சமூகத்தில் எவ்வாறு அமைதியாக வாழ்வது என்பதை அவர் தனது சொந்த செயல்களின் மூலம் உலகிற்குக் காட்டினார்.
குறிப்பாக ‘மதினா சாசனம்’ மூலம் பல்வேறு கோத்திரங்கள் மற்றும் மதக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார். அமைதி என்பது வெறும் மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, ஒருவரையொருவர் மதிப்பதும் நீதியை நிலைநாட்டுவதுமே ஆகும் என்று அவர் கற்பித்தார்.
நமது தாய்நாடான இலங்கையும் பல்லின, பலமத, பல கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இத்தகையதொரு சமூகத்தில் பரஸ்பர புரிதல், சகவாழ்வு மற்றும் சகோதரத்துவத்தைப் பேணுவது நிலையான வளர்ச்சிக்கும் அமைதிக்கும் அத்தியாவசியமானதாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய உன்னதமான அமைதி மற்றும் சகவாழ்வுப் பாதையைப் பின்பற்றி, இனம் அல்லது மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் மதிக்கும், நீதியான இலங்கையைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இந்த மிலாத்-உன்-நபி திருநாள் நமது நாட்டில் பரஸ்பர மதிப்பையும் புதிய அமைதியான நாளை உருவாக்கவும் வழிவகுக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.










