இலங்கையில் தற்போது நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையை மாற்றி, புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை நோக்கி நகர்வதற்கான புரட்சிகர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி என்பன இதில் முன்னணியில் உள்ளன. இதன் ஒரு தீர்க்கமான கட்டமாக நெடுந்தீவு (Delft), அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை இணைத்து திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 2,600 தொன் கார்பன்டைஒக்சைட் வெளியேற்றம் பூஜ்ஜியமாக்கப்படுவதுடன், ஒரு மில்லியன் லீட்டர் டீசலுக்குச் செலவிடப்படும் வெளிநாட்டு நாணயமும் சேமிக்கப்படும்.
இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை கீழேயுள்ள காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளது.



























