பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரசன்ன சஞ்சீவ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசின் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயற்பட்டு, வேறொரு தரப்பினருக்குப் பயனளிக்கும் வகையில் செயற்பட்டதன் மூலம் அரசுக்கு 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி ஊழல் புரிந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
3










