ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ, கொழும்பு திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
57 வயதான அவரது சடலம், வீட்டின் விட்டத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5










