மாறையில் அழகுநிலையத்தில் ரூ. 7 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் தம்பதி கைது!

Mathara 2026.08.28 (1)

மாறை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அழகுநிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 07 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த 27ஆம் திகதி குறித்த அழகுநிலையை முற்றுகையிட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 07 கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபா பணம், 02 மின்னணு தராசுகள் மற்றும் 04 கைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தம்பதியினர் மாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்