ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், சில வரையறுக்கப்பட்ட உயர்குடி குழுக்களும் முன்மொழியப்பட்ட நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக முன்னெடுத்து வரும் பிரசாரங்களின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுவரை மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கிய உயர்குடி குழுக்கள் முன்னெடுத்து வரும் போலிப் பிரசாரங்களுக்கு எதிராக வாசுதேவ நாணயக்கார தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அந்த உயர்குடி குழுக்களின் பிரதிநிதிகள் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், அவர்களின் நிலைப்பாட்டுக்கு மாறான தனது கருத்தை நேரடியாக முன்வைத்துள்ளார்.
11










